காக்கும் கன்கள்.
Thursday 10 August 2017
Friday 28 July 2017
Tuesday 25 July 2017
மகிழ்ச்சி
என் அன்புள்ள,
இறைவா!
நீங்கள் எனக்களித்த
துன்பத்திற்க்கு
மிகவும் நன்றிகள்,
அத்துன்பத்தாலே
நான் என்னை
உனர்ந்தேன்,
புரியாத அந்த
புரிதலை
உனர்ந்தேன்,
என் மகிழ்வினை
உனர்ந்தேன்,
இப்பிறப்பில்
இதை விட
பெரிய வரம்
உன்னிடத்தில்
எனக்கு வேன்டாம்.
இருந்தும் வரம்
ஒன்று எனக்கருள
விரும்பினால்,
இனி ஒரு பிறப்பானால்
என் மகிழ்வை என்னோடு சேர்த்து
படைத்துவிடு,
இதே இயல்போடு என்னருகிலே
படைத்துவிடு,
என் தேடல்களும்,
புரிதல்களும்,
உனரும் வண்ணம்
படைத்துவிடு,
அதை விட பெறிய
மகிழ்ச்சி
அப்பிறப்பிலும்
எனக்கு
ஏதுமில்லை....
ரா. சுரேஷ்பெருமாள்சாமி
Saturday 22 July 2017
உணர்வு....
Sunday 25 June 2017
இயற்கையெனும் காதலியே!!!
இறைவனின் படைப்பில்,
இயற்கையெனும் பேரழகே!!
௮ந்த கருநீல மேகம்தான்
௨ன் கூந்தலா?
பச்சை பட்டுடுத்திய
மரம்,செடி,கொடிகள்தான்
உன் ஆடையா?
உன் மடியில் தவழும்
புளு,பூச்சி,வனவிலங்குகள்தான்
உன் மழலைகளா?
உன் மலை இடுக்கிலே தோன்றும் நீரோடை
எழுப்பும்
சல சலவெனும் சத்தம்தான்
உன் சங்கீதமா?
என் கற்பனையில்
இவையனைத்தும்
உன்மையென்றால்,
உன் ௮ழகில் மயங்கிய ஆடவன்
வரிசையில் நானும்
ஒருவனே!!!
ரா. சுரேஷ்பெருமாள்சாமி
Saturday 24 June 2017
வலி
௨தாசினமும்,
ஏமாற்றங்களும்,
முன்னேற்ற
வாழ்க்கையின்
பரிசுப்பொருட்கள்.
இருந்தும் நாம்
விரும்பியவர்களிடம்
௮து கிடைக்க
பெற்றதால், ஏனோ!
மனதின் வலியை
கண்கள்
௨னர்த்துகிறது....
ரா.சுரேஷ்பெருமாள்சாமி
Friday 24 March 2017
கன் பேசும் மொழி
♥கண்ணின் மொழி
—————————–
♥1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது
♥2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது
♥3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது
♥4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது
♥5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,ஆசைப்படுகிறது.
♥6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
♥7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது
♥8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது
♥9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
♥10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது
♥11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது
♥12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.
♥13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்
♥14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்
♥15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது
♥16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது
♥17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது
♥18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது
♥19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் காம வயப்படுகிறது.
♥20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.
♥21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது
♥22. கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது
♥23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.
♥24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.
♥25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது
♥26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.
♥27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம் மேலும் தெரிந்து கொள்ள https://www.facebook.com/thirukumarancreators/ இந்த பேஜ்யை லைக் செய்யவும், google+ சில் பின் தொடர https://plus.google.com/communities/103171647634355261679 மற்றும் https://plus.google.com/communities/106193660464701010903, blog user http://sureshperumalsamy.blogspot.com, மற்றும் http://thirukkumarancreators.blogspot.com நன்றி
Saturday 25 February 2017
ஆண்
படித்ததில் பிடித்தது
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
*ஆணின் ஆட்டம்*
*பதினாறு வரைதான்*
பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு
வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் *ஆண்மகன்.*
பத்து வயது வரை பறந்து திரியும்
பறவைபோல இருப்பவன்...
பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது... *சோதனை*
"
டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது *ஐடிஐ* தான்.... தெரிதா?"
ப்ளஸ்1 போகும்போது....
"ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... *இன்ஜினீயரிங்.*
இல்லேன்னா ஏதாவது *ஒர்க்ஷாப்தான்.."*
உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்...
" ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டுப் போகல..
2 லட்சம் பேங்கு லோன்லதான் படிக்கிறங்கற நெனப்பு இருக்கட்டும்...
சும்மா மைனர்களின் வேஷம் போட்டீன்னா குடும்பம் *நடுத்தெருவுலதான்.."*
நான்கு வருஷம் படிப்பு படிப்பு என உயிரை விட்டால்...
ஏழாவது செம்மில் 'கிலி' பிடிக்கும். Placement ல புடிங்கிடுச்சுன்னா.. எல்லாமே போச்சு.
*உசிரோட இருந்து பிரயோஜனமில்ல.(*
அப்பா, அம்மா இருவரின் வசனம் அவ்வப்போது மிரட்டும்.
"
*பொட்டை புள்ளைன்னா பரவால்ல.*
*கடனை ஒடனை வாங்கி 10 ங்கறது 20 பவுனா போட்டா எவன் கையிலயாவது புடிச்சுக் குடுத்துட்டு வெடுக்குன்னு இருக்கலாம்.*
நீ ஆம்பளை! நாளைக்கு ஒரு நல்ல வேலையிருந்தாத்தான் ஒரு மனுசனா ஊருக்குள்ள தலைநிமிந்து நடக்கமுடியும்.
*வாங்குன கடனைக் கட்டனும் உங்க அக்காளை ஒரு நல்ல எடத்துல புடிச்சுக் குடுக்கனும்*.
*எல்லாம் உங்கையுலதான் இருக்குது..."*
ஒரு வழியாக வேலைக்கு சேர்ந்தால்....
பெருநகரத்தில் அகப்பட்ட சிறுமீனாக மிரண்டு அந்த ஆடம்பரங்களில் கரைந்து போகாமல் குடும்பத்தின் கனவுகளை கலைத்துப் போடாமல்..
*எந்த ஓட்டலில் குறைந்த விலையில் சோறுகிடைக்கும்* என்று அலைந்து..
இரண்டு நாள் விடுமுறைக்கு பஸ்கட்டணத்தை பயத்துடன் கணக் கிட்டு மலிவு கட்டண பஸ்சில் இடுப்பொடிய பயணம் செய்து
கவலையோட விசாரிக்கும் பெற்றோரிடம் மகிழ்ச்சியாக இருப்பதாக நடித்துக் கொண்டு...
உள்ளுக்குள் தனியாக எல்லாவற்றையும்
சமாளித்து....
கல்விக்கடன், குடும்பக்கடன் அனைத்தையும் சமாளித்து மீள்வதற்குள்
*"எத்தனை நாளைக்கு இப்படி ஓட்டல்ல சாப்பிட்டு ஒடம்பைக் கெடுத்துக்கவ.*.
சீக்கிரம்
ஒரு கல்யாணத்தைப் பண்ணீட்டா.. எங்க கடமை முடிஞ்சுறும்..."
இங்கேதான் தொடங்குகிறது..
*ஒரு ஆணின் இரண்டாம் கட்டம் ...*
திருமணம் நடந்து
மனைவியிடம் அன்பாக நடந்து
கொண்டால்!!!!
*"அய்யோ சாமி காணாதக் கண்டவன் மாதிரி இந்தத் தாங்கு தாங்கறான்"*
என்று குடும்பத்தினரிடமும்
அதே நேரத்தில் குடும்பத்தில் கொஞ்சம் அக்கறை காட்டினாலும்....
*" ஒங்களுக்குன்னு ஒரு குடும்பமாயிருச்சு...*
இத்தனை காலம் சம்பாதிச்சதைப் பூராம்
தொடைச்சிப் புடுங்கியாச்சு.. *இனிபோதும்"*
என்று பெண்டாட்டியிடமிருந்து புறப்படும்
ஒரு *உத்தரவு*....
*வேலை செய்யும் இடத்தில் இருக்கும் நெருக்கடியை வீட்டில் சொல்லக்கூடாது.*
*வீட்டில் கிளம்பும் புகைச்சலை வெளியில் சொல்லக்கூடாது.*
ஆசை 60 நாள் மோகம்30 நாள்...
திருமண வாழ்வில் சிறு சிறு ஊடல்கள் சண்டையாகும் .
*பெண்ணின் குரல் ஓங்கும்போது ஆணின் கவுரவம் குன்றிப்போகும்*
என்கிற அச்சத்தில் வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்து முதுகெலும்பு காணாமல் போகும்
*பெற்றவர்களையும் விட்டுக் கொடுக்காமல்*,
*மனைவி பேச்சையும் தட்ட முடியாமல்*
*இரண்டு பக்கமும் ஆதரவு கொடுத்து*
*இரண்டுபக்கமும் கெட்ட பெயர் வாங்கி..*
பிள்ளைகள் பெற்று வம்சத்தை விருத்திசெய்து,
அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களது ஆசைகளை தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லாடும்போது
மனைவியே *'கஞ்சன் '* என்று சொன்னாலும் அதையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளவில்லை யெனில்
*'சிடுமூஞ்சி'*யைக் கட்டிகிட்டு சீரழிகிறேன் என்னும் புலம்பலையும் சகித்துக் கொள்ளவேண்டும்.
குடும்பத்தில் விசேஷம் என்றால்
மனைவி மக்களுக்கு நல்லதாய் தேடி தேடி துணிமணி வாங்கிக் கொடுக்கும் ஆண்பிள்ளை
தனக்கு துணி எடுக்க *தள்ளுபடிக்காக* அலைவான்.
தீபாவளி திருநாள் என்றால் எல்லாருக்கும்
நல்லபடியாக செய்து..
*உறவு & நட்பில் வரும்*....
கல்யாணம் கருமாதிக்கு *மொய்* எழுத பொய்சொல்லி கடன் வாங்கி,,
*வட்டி கனவில் வந்து மிரட்ட கனவில் கூட பயந்து ஒடுங்க...*
கடன் தொல்லைகளால் மனைவியிடம் கலவி மறந்தாலோ?
"ம்க்கும் இந்த வூட்ல நான் ஒரு மனுஷி இருக்கேங்கற நெனப்பே இல்ல...
இந்த *ஆம்பளைக்கு..,"* என்கிற மாபெரும் பழிவரும்.
உறவில் யாராவது சொந்தமாக
ஒரு வீடு வாங்கினாலோ?
கார் வாங்கினாலோ?
அந்த நிமிஷம் புறப்படும் விமரிசனக் கனைகள்...
*"ஊரு ஒலகத்துல ஒவ்வொரு ஆம்பளைக எப்படியெல்லாம் சாமர்த்தியமா பொளைச்சு குடும்பத்த மேலுக்குக் கொண்டு வராங்க..*
*எனக்கும் வாச்சுதே ஒன்னு...*
அரைக்காசுக்கு பொறாத மனுசன்...
எல்லாம் நான் வாங்கி வந்த வரம்..
"என்கிற *தலைக்கணம்* தொடங்கும்.
குடும்பத்தில் குழந்தைகளிடம் கரிசனையாக நடந்து கொண்டால்... '
*பிள்ளைகளை செல்லம் கொடுத்து கெடுக்கிறாய்'*
கண்டிப்பாக நடந்து கொண்டாலோ?... '
*பெத்த புள்ளைங்கன்னு துளியாவது பாசம் இருக்கா???*
எப்பப் பாரு கரிச்சுக் கொட்டறது'
*அப்பா.. அம்மாவுக்கு* வயதாகி அவர்கள் படுக்கையில் விழுந்து
*அதை பார்க்கும் நிலை வந்தால்*
பெண்களுக்கு
அப்போது வரும் ஒரு *தர்ம ஆவேசம்.*
*'ஒங்க அப்பா அம்மா காடு தோட்டம் காரு பங்களான்னு வாங்கி வெச்சிருக்காங்களா?*
என்னால முடியாது ..
வழிக்க..
*
*உங்க தம்பிய பாக்கச் சொல்லுங்க..*
*அமைதியான ஒரு ஆண்மகனுக்கு வாழ்நாளெல்லாம் வசவுதான்,*
*பழியும், தூசனமும், நிந்தனையும் நிழல் போல அவனைத் தொடர்ந்து வரும்.*
*ஒருபெண் தன்பிள்ளையை பத்து மாதம் சுமந்து பெற்றுத்தருகிறாள்*
*அதன் பெருமையையும் உரிமையையும் காலமெல்லாம் அவள் அனுபவிப்பாள்.*
ஆனால் வாழ்நாள் முழுவதும்
ஒரு குடும்பத்தையே தன் நெஞ்சில் சுமக்கும்
ஒரு ஆணுக்கு
*எந்தக் பெருமையும் இல்லை* .
*எந்தப்புகழும் இல்லை*.
*புகழ் வேண்டாம், பழிவராமல் இருந்தால் போதாதா?*
இத்தனை சோதனைகளையும் தாண்டி ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அப்போதும்
"
நான் மட்டும் இந்த ஆளை கட்லேன்னா.. இந்த மனுசன் ரோடு ரோடா *பொறுப்பில்லாம* சுத்திகிட்டிருந்திருப்பாரு
*இன்னிக்கு இந்த வீடு காரு சொத்து சொகம் எல்லாம் என்னோட ராசி..*
என் சாமர்த்தயத்தில நான் கொண்டு வந்தேன் என்பர்!!!!
ஆணாய்ப் பிறந்தவனின் ஆட்டமெல்லாம் *
*25* வயது வரைதான்
அதன்பிறகு அவன் சாகும்வரையிலும்
*"கண்ணுக்குத் தெரியாத ஒரு நுகத்தடி*
அவன் கழுத்தின்மீது ஏறி அமர்ந்து அவனை அழுத்திக் கொண்டேயிருக்கும்.
அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்..
Saturday 18 February 2017
பிறக்கவில்லை கவிஞன்.
பெண்ணே!!!
மௌனமும், மூக்கின்மேல் கோவமும்,
அந்த நமட்டு சிரிப்பும் தான்
உன் மொழியென்றால், இவ்வுலகில் மட்டுமல்ல ஈரேழுலகத்திலும்
இன்னும் பிறக்கவில்லை கவிஞன்
அதில் கவி பாட,
'கவிதன்' ரா.சுரேஷ்பெருமாள்சாமி
Monday 13 February 2017
அப்பா,
💑👪💑👪💑👪💑
அப்பாக்கள்:
🌺ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.
ஆனால்
ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.
🌺🚹அப்பா...
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.
🌺🚹கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.
🚹🌺தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சிலுவைகள் கனதியானவை. அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.ا
🌺🚹ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையினதும், அங்கலாய்ப்பினதும் தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.
🌺🚹அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.
🌺🚹தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.ا
🌺🚹தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும். வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்தினதும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.
🌺🚹நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.
🌺🚹யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!
🌺🚹ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.ر
🌺🚹விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.
🌺🚹இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.
🚺🚺ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.
🚹🚹தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.
🚹ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை சந்தித்திருப்பார்கள்?
🚹பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?
🚹எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?
அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?
🚹எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?
🚹எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?
🚹முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..
வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...
நரம்பு தெரியும் கைகளில் ...
நரை விழுந்த மீசைகளில் ...
அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.
🚹தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?
🚹ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?
🚹மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?
🚹பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?
🚹இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?
🚹படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலி சுமந்து வலி சுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?
🚹வீரம், துணிச்சல்,
விடாமுயற்சி,
நம்பிக்கை, உழைப்பு..
இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.
🌺ஒரு இளைஞனோ யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார். பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.
“எதுக்கும் பயப்படாதே”
“ஒன்றுக்கும் யோசிக்காதே”
“எல்லாம் வெல்லலாம்”
“மனசை தளரவிடாதே”
“நான் இருக்கிறேன்”
இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.
🌺அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.
🌺தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.
🚹அப்பாக்கள்:
➡பிள்ளைகளின் சுமைதாங்கிகள்
➡பிள்ளைகளின் நெம்புகோல்கள்
➡பிள்ளைகளின் அச்சாணிகள்
➡பிள்ளைகளின் சூரியன்கள்
➡பிள்ளைகளின் திசைகாட்டிகள்
➡பிள்ளைகளின் ஆசிரியர்கள்
➡பிள்ளைகளின்
நம்பிக்கைகள்
🌺அப்பா:
தூய்மையான
அன்பு,
போலியற்ற
அக்கறை,
நேர்மையான வழிகாட்டல்,
நியாயமான
சிந்தனை,
நேசிக்கத்தக்க உபசரிப்பு,
மாறுதலில்லா நம்பிக்கை,
காயங்களற்ற
வார்த்தை,
கம்பீரமான
அறிவுரை,
கலங்கமில்லா
சிரிப்பு,
உண்மையான
அழுகை,
என அத்தனையும் உளமகிழ்ந்து
செய்து வளர்த்தவர்.
தோழனுக்கு தோழனாய்
தோள் கொடுத்தவர் அப்பா,